நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நித்திஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்ற 15 எம்எல்ஏக்கள் அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக பாபா சித்திக் மற்றும் அவருடைய மகன் ஜீஷான் சித்திக் ஆகியோர் தேர்தலுக்கு முன்பாக அஜித் பவார் தலைமையிலான என்சிபி அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.