தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இதே போன்று புதிய அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா? என அவை கேள்வி எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.