மக்களவைத் தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெரியகுளம் பகுதியில் பேசிய அவர், ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது போதை பழக்கத்தை வளர்த்து வருகிறார். ரவுடி ராஜ்ஜியமான திமுகவில் போதைப்பொருள் கும்பல் உள்ளது என தெரிவித்தார்.