மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், மக்களின் மனநிலை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக திமுக மற்றும் பாஜக அரசுகள் பணியாற்றவில்லை என்று தெரிவித்தார்.