தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனது பேச்சுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்து தொடர்பாக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பிக்பாக்கெட் நபர்களுடன் ஒப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி. ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டிருந்தது. இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.