தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார். மேலும், தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளதாக கூறிய அவர், பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்துப்படுவதாக வேதனை தெரிவித்தார்.