இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6,23,26,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இதுவரை 68,144 வாக்கு மையங்கள் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில் நடைபாண்டில் கூடுதலாக 177 வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் பணிகளுக்காக ஏப்ரல் 1 முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.