நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்த நிலையில் தமிழகத்தின் போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சொந்த பயன்பாட்டுக் கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது எனவும், தேர்தல் நேரத்தில் சிலர் இவ்வாறு பயன்படுத்துவதாக புகார் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.