நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.