திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளரை அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.  திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக வைகோ பேட்டியளித்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக சார்பில் துரை வைகோ எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி, பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.