அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது இபிஎஸ்-க்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பு தாமரை சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடுமா போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும் என தொடங்கியுள்ளன.