தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 1000-க்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதல் குவிந்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, தே.மு.தி.க-வை பொறுத்தவரையிலும் எப்போதும் கேப்டன் தான் தலைவர். அவரை தவிர்த்து வேறு தலைவரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் தேமுதிகவின் உள்கட்சி தேர்தல் நடந்து வருவதாகவும், யார் யாருக்கு எந்த பதவி கொடுக்கப்படும் என்பதை தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தகுந்த நேரத்தில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்..