தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் என்ற பகுதியில் தெரு நாய் கடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி அவர்களது குடிசையில் தொட்டிலில் குழந்தை கொண்டிருந்தது.

அப்போது குடிசையில் அருகே மூன்று தெருநாய்கள் வந்த நிலையில் அதில் ஒரு நாய் குடிசையில் உள்ளே சென்று குழந்தையின் முகம் மற்றும் நெற்றியில் கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இன்று உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.