ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேஷ் என்ற 14 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த அவன் திடீரென அப்படியே சரிந்து விழுந்துள்ளான். உடனடியாக சிறுவனை ஆசிரியர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சவாய் மான்சிங் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்று சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மாரடைப்பால் மரணம் நிகழ்ந்துள்ளது என கூறி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.