சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தென்னிந்திய டப்பிங் யூனியன் கட்டிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக ராதாரவியும், பொதுச் செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் சாலிகிராமத்தில் 80 அடி சாலையில் அமைந்துள்ள டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடந்த போது ராதா ரவி தரப்பிலிருந்து உரிய ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக இன்று டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வளாகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.