இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். ஆனால், இந்த ஆட்டம் தனது குடும்பத்திற்குள் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆல்பி மார்கல் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மார்கல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சகோதர யுத்தம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து ஆல்பி மார்கல் கூறுகையில், “இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதலைக் கண்டு எங்களை விட எங்கள் தாய் தான் அதிக கவலையில் உள்ளார். ஒருபுறம் நான் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, மறுபுறம் எனது தம்பி மோர்னே பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணி. இந்த இரண்டில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாமல் அவர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
Albie Morkel on facing his brother Morne in India Vs South Africa game (Espncricinfo):
“My mother is more worried than us. She doesn’t know who to support, India or South Africa”. 😂❤️ pic.twitter.com/hLfsnIyehe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 17, 2026
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த ஆல்பி மார்கலும், வேகப்பந்து வீச்சாளராக முத்திரை பதித்த மோர்னே மார்கலும் ஒரே அணியில் விளையாடியவர்கள். தற்போது மோர்னே இந்திய அணியின் ஆலோசகராகச் செயல்படுவதால், சர்வதேச அரங்கில் இந்தச் சகோதரர்களின் மோதல் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. உணர்வுப்பூர்வமான இந்தத் தருணத்தை ஆல்பி மார்கல் தனது பாணியில் நகைச்சுவையுடன் விவரித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
