சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான நிலையத்தை ஒரு சர்வதேச பரிமாற்றம் மற்றும் தெற்காசியாவின் விமான சரக்கு மையமாக மேம்படுத்த வேண்டும்.

மேலும் புதிய அதி நவீன சர்வதேச பயணிகள் பரிமாற்றம் விமான நிலைய முனையம் மற்றும் விமான சரக்கு பரிமாற்று மையமாகவும், தூத்துக்குடி விமான நிலையத்தை மாற்ற வேண்டும். இதற்கான கட்டுமானம் போயிங் 474, ஏர்பஸ் 380, அன்டோனோவ் ஆன் 225 போன்ற விமானங்களை இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு புதிய ஓடுபாதைகள் மற்றும் தரை ஆதரவு உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிப்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து உலகின் அனைத்து முக்கிய விமான நிலையங்களையும் இணைக்கும் விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையத்தை மாற்ற வேண்டும். மேலும்  வணிகம், தொழில்துறை மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த நலன்களை கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.