தெலுங்கானா மாநிலம் கொத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த பல வியாபாரியின் 16 வயது மகன் ஹைதராபாத் நாராயணகுடா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு போகாத மாணவன் தனது நண்பருடன் துரித உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு சிக்கட்பள்ளியில் உள்ள விடுதி அறைக்கு வந்துள்ளார்.

அதன் பிறகு மாணவனின் நண்பன் அவரை சந்திப்பதற்காக விடுதி அறைக்கு வந்தபோது கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நண்பன் விடுதி காப்பாளரிடம் முறையிட அரையின் கதவை உடைத்து பார்த்தபோது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மாணவனின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.