பொதுவாகவே மனிதர்களுக்கு தும்மல், இருமல் மற்றும் விக்கல் போன்றவை அடக்க முடியாத ஒன்று. இவை எந்த நேரத்தில் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதனை அடக்குவதால் சில அபாயங்கள் ஏற்படும். அதன்படி ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் உணவுக்குழாய் சேதம் அடைந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

தொடர்ச்சியாக தும்மலை அடங்கிய காரணத்தால் அவரின் உணவுக் குழாயில் இரண்டு மில்லி மீட்டர் அளவுக்கு கிழிசல் ஏற்பட்டுள்ளது. அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது தானாக குணமாகி விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.