வெனிசுலா நாட்டில் உள்ள கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதிய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.