தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில்  நில மதிப்பீட்டை குறைத்துக்காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.

இதில், பான் மற்றும் ஆதார் இல்லாமல் 730 லட்சத்திற்கும் மேல் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.