திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் பகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது கட்சித் துண்டு வீசப்பட்டது. இந்தச் செயலால் கடும் ஆத்திரமடைந்த பிரேமலதா, துண்டை வீசிய அந்தத் தொண்டரை கடுமையாகச் சாடினார்.
அடுக்கு மொழியில் பேசி அடிவாங்கிய பிரேமலதா#Premalatha | #DMDK | #ElectionCampaign | #Election | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN @PremallathaDmdk pic.twitter.com/DbAtDIem7D
— Naalai Namadhe (@NaalaiNamadheTN) April 10, 2026
அரசியல் மேடையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடவா தெரியாது என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அந்தத் தொண்டரின் இத்தகைய செயலைக் கண்டித்து அவர் உரையாற்றியதால், பிரச்சார இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது
