மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கிரீன் பார்க் காலனியில், 25 வயது இளம்பெண் ஷிஃபா தனது வீட்டின் முதல் தள பால்கனியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பிடிமானம் தளர்ந்து அவர் கீழே விழுந்துள்ளார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில் தரைத்தளத்தில் இருந்த கடைக்காரர் மற்றும் அவரது மகன், ஷிஃபா கீழே விழுந்ததைக் கண்டு உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
📍Indore, Madhya Pradesh: CCTV captures a woman falling from an upper floor onto her own balcony while drying clothes. The incident highlights how routine household tasks can turn dangerous in seconds.
pic.twitter.com/jgaie9iUIs— Deadly Kalesh (@Deadlykalesh) February 16, 2026
6 மாதங்களுக்கு முன்புதான் முகமது ஆரிஃப் அப்பாஸி என்பவருடன் ஷிஃபாவிற்குத் திருமணம் நடந்துள்ளது. இந்த விபத்தில் முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த ஷிஃபா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது தற்செயலாக நடந்த விபத்துதான் என்றும், இதில் எந்தவிதமான மர்மமும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
