புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு மர்மமான முறையில் சேகர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி சேகர் இறந்து கிடந்துள்ளார்.

அவருக்கு அருகில் விஷம் கலந்த தண்ணீர் பாட்டில், சாதம், பிஸ்கட் பாக்கெட் ஆகியவை கிடந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சேகரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.