தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அண்மையில் சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜீனி என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை கேட்டு நடிகர் ஜெயம் ரவி அவருடைய வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதாவது சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்துள்ளார்‌. இந்நிலையில் 33 வயதாகும் ராஜா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ஜெயம் ரவி நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.