தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் கேரளா அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அரசியல் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, ஆளுநரை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநர் தனக்கென இருக்கும் சில அதிகாரங்களை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.