ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.