தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் ஜவுளி கடைகளிலும் பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகிறார்கள். இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு ரயில்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளது. அதாவது ரயில்களில் பயணம் செய்யும்போது பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.