டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க அமாத்மி அரசை முடிவு செய்துள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது, ஆன்லைன் டெலிவரி செய்வது மற்றும் வெடிப்பது என முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.