திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.