திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை காண மலையில் ஏற 2500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ பகுதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி சீட்டுகள் திருவண்ணாமலை அரசு பள்ளியில் வழங்கப்படுகின்றன. அனுமதி சீட்டு கிடைக்காத பக்தர்கள் கிரிவலப் பாதையில் நின்று தீபத்தை தரிசிக்கலாம். மகா தீப தினத்தை முன்னிட்டு 14,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.