திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஜனவரி 24 இன்றும் நாளையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் – திருவண்ணாமலை, புதுச்சேரி – திருவண்ணாமலை, கடலூர் – பண்ருட்டி, திருக்கோவில், கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை, வேலூர் – திருவண்ணாமலை, திருப்பத்தூர் – திருவண்ணாமலை, ஆரணி /ஆற்காடு -திருவண்ணாமலை, காஞ்சிபுரம் – திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குடியரசு தினம் மற்றும் தைப்பூசம் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.