திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை -சென்னைக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3,4,5 மணிக்கும், ஆகஸ்ட் இரண்டாம் தேதி மறுமார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3,4,5 மணிக்கு சிறப்பு பேருந்துகள் புறப்படும். கூடுதல் தகவல்கள் அறிய 9445014452, 9445014463, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.