தமிழகத்தில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சிக்கு எதிராக அன்புமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் கடலூர் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை என மற்ற மாவட்டங்களில் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேருந்து உடைப்பு மற்றும் டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது.