கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  NLC-யை முற்றுகையிட்டு அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருக்கும் போலீசாருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, போலீசாரின் வாகனம் அடித்து உடைப்பு, கல்வீச்சு என அடுத்தடுத்து கலவரம் வெடித்தது. பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீசார் வானத்தை நோக்கி தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்