திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமிஇன்று  அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் வார இறுதி நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என கருதி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது