திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதே சமயம் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒன்பது தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.