விஜய் ஆண்டனியின் மனைவி தன் மகள் குறித்து x தளத்தில் எழுதியுள்ள பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் ஆண்டனி மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி தன் மகள் குறித்து ட்விட்டர் X தளத்தில் எழுதியுள்ள பதிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடன் 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் எனத் தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் வைத்திருப்பேன், அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்கு காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா” எனப் பதிவிட்டுள்ளார்.