அமெரிக்காவில் மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற எழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 16 வயதான சம்மி பெர்கோ என்ற சிறுவர் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுவனின் உடலின் அருகில் சென்று அமர்ந்து சிறுவனது ஆன்மாவை வலிய அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு சிறுவனின் உடல் அசைவதை கண்டு ஆச்சரியமடைந்த பெற்றோர் உடனே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறிவியல் முறைப்படி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவர் மீண்டும் உயிர் பெற்ற எழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.