உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்வேன் என மஸ்க் கூறினார். இந்நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு, புதன் கோள், அதற்கு அப்பால் உள்ள விண்வெளி பகுதிகளுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வலிமையான ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏவு தளத்திலிருந்து பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை அந்த நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.