கர்நாடகாவின் கதக் என்ற மாவட்டத்தை சேர்ந்த அப்பன்னா கோரகி (28) என்பவரும் லலிதா ஹலகேரி(26) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த நான்காம் தேதி லலிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாலியை கழற்றி வைத்துவிட்டு கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய லலிதா தனது காதலனை சந்தித்துள்ளார். அதன் பிறகு இருவரும் ஒன்றாக ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்டால் லலிதாவின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.