உத்திரபிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற பைரோ பாபா என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சிலை முன்பு தனக்கு திருமணமாக வேண்டும் என்று சோட்டு என்ற இளைஞர் தினமும் விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளார். ஆனால் மாத கணக்கில் விரதம் இருந்தும் தனக்கு திருமணம் ஆகாததால் கோபத்தில் சிவலிங்கம் சிலையை அவர் திருடி உள்ளார். அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.