தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தின் மூலம் தான்.

அதனைத் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன்,சமுத்திரம் உள்ளிட்டா பல திரைப்படங்களில் நடித்தார். இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அபிராமிக்கு 40 வயது ஆகும் நிலையில் 14 வருடங்கள் கழித்து தாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhirami இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhiramiact)