தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி பருத்திவீரன் என்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது அவருக்கு 40 வயது கடந்துள்ள நிலையில், கதாநாயகி மற்றும் குண சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ஹிந்தியில் அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் நடித்திருந்தார். இவர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை பிரியாமணி தன்னுடைய திருமணத்திற்கு எதிராக பலர் அவதூறாக பேசி வதந்தி பரப்பியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எங்களுடைய திருமணத்திற்கு எதிராக வந்த அவதூறுகள் என்னை மிகவும் பாதித்தது. இதனால் என்னுடைய பெற்றோர் கூட மிகவும் மன வருத்தம் அடைந்தனர். அந்த சமயத்தில் என்னுடைய கணவர் எனக்கு பக்க பலமாக இருந்தார். அவர் எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ சினிமாவில் மட்டும் கவனம் செலுத்து என்று என்னிடம் கூறினார். நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதையிலும் என்னுடைய கை உன்னுடன் இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார். அப்படிப்பட்ட கணவர் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். மேலும் எங்களுக்கு எதிராக நிறைய வதந்திகளை பரப்பினார்கள் என்று கூறியுள்ளார்.