திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி என்று தெரியாதவர்கள் திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையில் லட்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது ஒரு நாளைக்கு 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் மேலும் தரமான கட்டுக்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.