அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஐ பி சி மற்றும் ஐடி சட்டங்களின் 120பி, 153 ஏ, 295, 504 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கொரோனா போன்றவற்றை ஒழித்துள்ளோமோ அதனைப் போலவே ஜாதி ஏற்ற தாழ்வுகளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் முடிக்க வேண்டும் என்று உதயநிதி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.