திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கொரோனா காலத்தில் படியேறி வரும் திருப்பதி பக்தர்களுக்கு இலவச டோக்கன் கொடுக்கும் வசதி நிறுத்தப்பட்டது.

கடந்த வாரம் அந்த வசதி மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில் அங்கு வருவோர் ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சில மாதங்கள் சோதனை முயற்சியாகவும் பின்னர் கட்டாயமாகவும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.