திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று(பிப்.,23) வெளியிடப்பட உள்ளது.

ஒவ்வொரு மாதமும் திருப்பதி தேவஸ்தான இணைய யதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.