தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் கடந்த 1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரோஜா மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார்.

இதன் காரணமாக நகரி பகுதியில் அமைச்சர் ரோஜா பிரம்மாண்டமான வீடு ஒன்றினை கட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தற்போது நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருப்பதால் அங்கேயே தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்பதற்காக பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி உள்ளார்.