குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தினை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை
பிரித்திகா யாஷினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தபோது திருநங்கை என்ற காரணத்தை சொல்லி நிராகரிக்கப்பட்டதாகவும் பிரித்திகா யாஷினி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கியது